Recents in Beach

குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி பேசுவது அவசியம்


Image result for குழந்தைகளுடன் விளையாடவும்

பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல  வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்று சொல்கிறார் கயல்விழி அறிவாளன்

ஒன்றாக உணவு

நாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.



முதல் நண்பன்

ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளை களுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.



பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல பேச்சு வார்த்தை தொடர்பு (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்று சொல்கிறார் கயல்விழி அறிவாளன்.

அடிப்படை விஷயங்கள்
உங்களுக்கு உங்கள் குழந்தையுடன் பேசுவதில் ஆர்வம் இருப்பதை உனர்த்தவும். உங்கள் குழந்தை உங்களுடன் பேச விரும்பி வரும்போது, மற்றவற்றில் இருந்து கவனத்தை எடுத்துவிட்டு உங்கள் குழந்தையின் மீது அவர் என்ன சொல்கிறார் என்பதன் மீதும் கவனத்தை செலுத்தவும். தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல் ஃபோன் போன்றவற்றை தூரம் வைக்கவும். நீங்கள் பேசும் போது, அந்த பேச்சுவார்த்தையில் வேறு எவரேனும் இருக்கவேண்டும் என்பது அவசியமானால், அவரை சேர்த்துக் கொள்ளவும். அல்லது உங்களின் பேச்சு வார்த்தை தனிமையிலேயே இருக்கலாம். இது உங்கள் குழந்தையின் நம்பிக்கையை பெற உதவும். அவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை முழுவதுமாக முதலில் கேட்கவும். இதில் பொறுமையை கையாள்வது என்பது மிகவும் அவசியம். முழு விஷயத்தை கேட்கும் முன்பு, பேச்சுவார்த்தையை விட்டு விலகுதல், அல்லது அவரை திட்டுதல், அடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்யக் கூடாது. உங்கலின் அறிவுரை கேட்க நினைத்தால், ஓரிரு நாட்கள் நன்றாக யோசித்து உங்கள் குழந்தைக்கு அறிவுரை சொல்லவும். ஆழ்ந்து சிந்திக்காமல் சொல்லும் அறிவுரை சரியாக இருப்பதில்லை. அதேபோல, அவர் தவறு செய்துவிட்டார் என்று நினைத்தால் அவருக்கு அதை புரிய வைப்பது உங்கள் கடமை. ‘நீ என் பிள்ளை, தவறு செய்திருக்கமாட்டாய்’ என்று கூறினால், அவர் சொல்லப்போகும் விஷயம் முழுவதாக உங்களை வந்தடையாது. அதற்கு பதிலாக ‘தவறு செய்வது இயல்புதா. பரவாயில்லை. திருத்திக்கொள்ளலாம்’ என்று சொல்லுங்கள். அதோடு நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்றும் பக்க பலமாக இருப்பேன் என்றும் உணர்த்துங்கள்.