Recents in Beach

என்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா? இத படிங்க முதல்ல?

மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனி. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.




மாதுளையின் வகைகள்:

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. பிடானா, ஆலந்தி, கண்டதாரி, மஸ்கட் ரெட்,  ஸ்பேனிஷ் ரூபி, காபூல், தோல்கா மற்றும் வெள்ளோடு போன்றவை மாதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும்.

பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடமே உள்ளது.

 இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர்.

மாதுளம் பழத்தின்  பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மாதுளை மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.


மாதுளை பழத்தின் 25 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:





1. தோல் அழற்சி பிரச்சனையிலிருந்து விடுதலை
 2. உலர் சரும பிரச்சனைக்குத் தீர்வு
3. பாக்டீரியா எதிர்ப்பு
4. வயதான தோற்றத்திற்கான எதிர்ப்பு
5. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகமுள்ள பழம் மாதுளை பழம்
6. இயற்கையான முகத் தேய்ப்பான்
7. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
8. மாதுளை பழத்தின் மூலம் மென்மையான சருமம்
9. காயங்களை ஆற்றுதல்
10. முகப்பரு பிரச்சினைக்குத் தீர்வு
11. நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.
12. மாதுளையின் கூந்தலுக்கான பலன்களை அள்ளி தருகிறது.
13. முடிவளர்ச்சி மற்றும் உறுதிக்கான வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
14. முடி நுண்குமிழை வலிமைப்படுத்துகிறது:
15. இள நரைக்குத் சிறந்த தீர்வு
16. பொடுகு மற்றும் பூஞ்சை தொல்லைக்குத் தீர்வு
17. அழற்சி மற்றும் வலுக்கைத் தலைக்குத் தீர்வு
18. துத்தநாகம் ஊட்டச்சத்து கிடைக்கிறது
19.மாதுளையில் வைட்டமின் ‘சி’ உள்ளது
20. மாதுளையில் இரும்புச் சத்து உள்ளது
21. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
22. மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு
23. நினைவாற்றலை பெருக்க மாதுளை பெரும் பங்கு வகிக்கிறது.
24. வயிறு குளாறுகளுக்கு ஏற்றது மாதுளை
25. பெண்களுக்கு அருமருந்து மாதுளை

மாதுளம்பழத்தின் பயன்கள்:-

1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:-


  • உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்  முக்கியமான வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், துல்லியமாகவும் அதிக அளவில் அழிக்கும் ஆற்றல் மாதுளம்பழத்தில் உள்ளது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், நமது உடலுக்கு சக்தியும் அளிப்பதில் மாதுளை ஒரு நல்ல பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நமது இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது என்பது குறிபிடித்தக்கது. மேலும் பித்தத்தைப் போக்கும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. முக்கியமாக இருமலை நிறுத்துகிறது.
  • புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. 
  • குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
  • மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது.

2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:-

  • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
  • மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். 
  • மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.




3. ஆண்மை அதிகரிக்க:-

  • மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். 
  • பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
  • தொடர்ந்து நோய் வாய் பட்டவர்கள் அவர்களின் நோயின் பாதிப்பால் அவர்களின் உடல்நிலை பலகீனம் அடையும் ஆகவே மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் நன்கு தேறும், மேலும் உடல் எடை கூடும். 
  • குடல், தொண்டை மற்றும் மார்பகங்கள் நுரையீரலில்  அதிகமான ஏற்படும் வலியை சரி செய்யவும். 
  • இன்றைய காலத்தில் உள்ள துரித உணவு(FAST FOOD HABBIT) பழக்கத்தால் ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர் அவர்கள்  மாதுளம்பழம் சாப்பிடுவதால் அதிக சக்தியை பெற முடிகிறது.

4. இதய வலி நிற்க:-

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

5. வயிற்றுப் புண்கள் குணமாக:-

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக:-

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.

7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க:-

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

கற்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிகப்பாக பிறக்குமாம்! குங்கும பூ வை விட அருமையான பயன் கிடைக்கும்


மாதுளையில் உள்ள ‘எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

8. வயிறு குளாறுகளுக்கு ஏற்றது மாதுளை:-  


புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.

மாதுளம் பழத்தின் விதைகளைச் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தவிருத்தி அதிகரிக்கும். குறிப்பாக மாதுளம் பழம் சீதபேதிக்குச் மாதுளம் ஒரு சிறந்த நிவாரணம் அளிக்கும் திறன் கொண்டது. மேலும் இதில் கொழுப்பு, மாவு, புரதம், தாதுப் பொருள் போன்ற எண்ணில் அடங்காத சத்துகள் அடங்கியிருக்கின்றன.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளைக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் மாதுளம் பழத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து விரைவில் குணம் பெறலாம்.

9. பெண்ககளுக்கு ஏற்றது:- 

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன்  குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும் சக்தி கொண்டது; மேலும் எலும்புகள் வலுப்பெற உதவும்.

மாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி  இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.

மாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.

மாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

10. நோய் எதிர்ப்புச் சக்தி

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.  இதயத்திற்கும், மூளைக்கும் இனிப்பு மாதுளம் பழம் அதிகமான சக்தி அளிக்கிறது.

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின்  மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.



மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

முடிவுரை! 

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த மாதுளம் பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான மாதுளம் பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் இதன் மாதுளம்பூ, மாதுளம் விதை தெரிந்துகொள்ளலாம்.