Recents in Beach

மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


Image result for மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
உடல் சுத்தம் பேணி, தினமும் குளிப்பது அவசியம். அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் உபயோகித்தல் கூடாது. குளம், குட்டை, குளிக்கும் தொட்டி போன்றவைகளில் நீராடுவதை விட நல்ல நீரை முகந்து குளித்தல் நல்லது.

முலைகளில் ஏற்படும் சுரப்பு நீர் காய்ந்து பெருக்குகளாக முலைக்காம்பில் இருக்குமாயின் தேய்த்துக் குளித்து அகற்றி விடுதல் நல்லது.

கர்ப்பிணி தன் பல்சுத்தத்தையும் பேணுதல் வேண்டும். பற்களைப் பேணாது சொத்தையாகமாற விட்டு விட்டால் பற்களின் வேர்களில் சீழ்பிடித்து கர்ப்பக் கன்னி போன்ற இன்னல்களுக்கு ஆளாகலாம். இதனைத் தவிர்க்க காலை, இரவு இரு வேளைகளிலும் பற்களைத் துலக்கி உண்ட பின்னரெல்லாம் வாய் கொப்புளித்துப் பற்களைப் பேணுதல் வேண்டும். பற்களுக்குத் தேவையான உயிரூட்டச்சத்துக்கள் அடங்கிய சத்துணவு அருந்தியும் குழிவிழுந்த பற்களை அடைத்தும், சொத்தைப் பற்களை மருத்துவரிடம் காட்டியும் சிகிச்சை பெற முடியும்.
பட்டுப்புடவைகளையும், கம்பளி வகைகளையும் அணிவது கர்ப்பிணிக்கு நல்லதல்ல. கனமில்லாத நூற்புடவைகள், மெல்லிய உள்ளாடைகள் ஆகியவற்றை உடுத்துவதே உகந்தது. மிகக் குளிரில் வெளியே செல்ல வேண்டி நேர்ந்தால், மட்டுமே கம்பளி உடைகளை அணிதல் வேண்டும். `பிரா' மார்பகங்களைத் தூக்கிப் பிடித்துப் பாரத்தை குறைப்பைவைகளாக இருக்க வேண்டுமேயன்றி மார்பகங்களை இறுக்குபவைகளாக இருத்தலாகாது. கையின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும், இறுக்கமான சட்டையும் அணியக் கூடாது. தொப்புளைச் சுற்றி உள் பாவாடையோ அல்லது சேலையையோ இறுக்கக்கட்டக் கூடாது.
கர்ப்பிணிகள் மென்மையான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். உயர்ந்த குதிகால் செருப்பு அணிவது கெடுதலாகும்.

உண்ணும் உணவு, குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளையும், கனி வகைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண் உடலுறவு கொள்வது என்பது நித்தம் நித்தம் என்று இல்லாமல், உடல் நிலைக்கும் மனநிலைக்கும் ஒத்தவாறு செய்வது இன்பம் பயக்கும். கூடிய வரையில் கர்ப்பம் தரித்த நிலையில் ஆறாவது வாரம் முதல் பன்னிரெண்டாம் வாரம் வரை மிக்க எச்சரிக்கையுடனும் மிதமான அளவோடும் உடலுறவு கொள்வது நல்லது. கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும்போது, உதிரப்போக்கு சிறிது இருந்தாலும் முந்தைய கர்ப்பங்களின் போது கருச்சிதைவுகள், குறைப்பேறுகள் முதலியன ஏற்பட்டிருந்தாலும் உடலுறவை அறவே தவிர்க்க வேண்டும்.